276 +
நிறுவனர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும் தரிசனம் செய்து உள்ளார்.
50,000 +
நிறுவனர் உலகத்தில் எல்லா இடத்தில் உள்ள சிவனடியார்களை திட்டத்தில் முலமாக ஒன்று சேர்த்துள்ளார்.
1, 000 +
நிறுவனர் சைவ சித்தாந்தத் தொடர் வகுப்புகளை நடத்தி வருகிறார்.
முனைவர் கயிலை துரைசாமி
M.Tech, MBA (IIM-B), PhD
அறிவையும் பக்தியையும் இணைத்து, ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சிகள் மூலம் உலகம் முழுவதும் சைவ சித்தாந்தத்தை வாழ்வியலாக மாற்றி அமைக்கும் செயல்வீரர்.
நிகழ்ச்சிகளை வெறுமனே நடத்துபவர் அல்ல — சித்தாந்த இயக்கக் கட்டமைப்பை உருவாக்குபவர். பக்தியையே அடியார்களின் அனுபவமாக மாற்றி, அதை மக்களிடம் பரப்பும் வழிகாட்டி. ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சிகளின் மூலம் சைவ சித்தாந்தத்தை உலகளவில் கொண்டு செல்லும் திறன் கொண்டவர்.
ஆயிரக்கணக்கான ஆன்மாக்களைத் தன்பால் ஈர்த்து, வழிநடத்தி, நடைமுறை ஆன்மீக வளர்ச்சிக்கு மாற்றிய செயல்திறன் கொண்ட தலைவர். இலட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்ய திட்டமிடும் திறன் கொண்டவர்.
நமது நிறுவனர் A.M.I.E. என்ற பட்டப்படிப்பில் அகில இந்திய அளவில் முதல் மாணவராக (All India Gold Medalist) தேர்ச்சி பெற்று, தனது இளநிலைப் பொறியியல் கல்வியில் சாதனை படைத்தார்.
BITS Pilani பல்கலைக்கழகத்தில் M.Tech கல்வியையும், Indian Institute of Management Bangalore (IIM-B)-இல் Executive MBA கல்வியையும் பயின்று வருகிறார்.
மேலும் Ph.D. படிப்பை பயின்று, முனைவர் (Doctorate) பட்டத்தைப் பெறும் நோக்கில் கல்வியைத் தொடர்ந்து வருகிறார்.
கல்வியில் சிறந்து விளங்கிய இவர், தொழில் துறையிலும் ஒரு சிறந்த வல்லுநராகத் திகழ்கிறார்.
TVS Motor Company நிறுவனத்தில் 15 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி, பின்னர் AUTOLIV என்ற பன்னாட்டு (MNC) நிறுவனத்தில் Director என்ற உயரிய பதவியை அடைந்தார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரிஷ்டி கன்சல்டன்ட்ஸ் (Shrishti Consultants) என்ற நிறுவனத்தைத் தொடங்கி, 200-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசனை (Management Consultancy) வழங்கி வருகிறார்.
நிர்வாக ஆலோசனை வழங்கும் பொருட்டு ஜப்பான், சீனா, கொரியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற பல நாடுகளுக்குப் பலமுறை பயணம் செய்துள்ளார்.
இவருடைய பேட்டிகள் வேந்தர் TV, கலைஞர் TV, News 7 போன்ற பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
செல்வச் செழிப்பு, உயர்ந்த பதவி என லௌகீக வாழ்க்கையில் சிறந்த நிலையில் இருந்தபோதிலும், அவரது மனம் இதைவிட மேலான, நிறைவான ஒரு வாழ்க்கையைத் தேடியது. மக்களின் வாழ்க்கையில் உண்மையான அமைதியை ஏற்படுத்த விரும்பி, அவர் ஆன்மீகக் கருத்துக்களையும் வழிகாட்டுதல்களையும் கற்பிக்கத் தொடங்கினார்.
பிறருக்கு உதவும் எண்ணத்துடன் தொடங்கிய அந்தப் பயணம், அவரது வாழ்க்கையையே முற்றிலும் உருமாற்றி, இன்று அவரை ஒரு உயரிய ஆன்மீக குருவாக உயர்த்தியுள்ளது.
புதுக்கோட்டையின் சிவநேயர் அறக்கட்டளை, கந்தர்வக்கோட்டையின் கயிலை அறக்கட்டளை போன்ற அறக்கட்டளைகளை நிறுவி, திருவாசக முற்றோதல், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு சிவத்தொண்டுகளைச் செய்து வருகிறார்.
பஞ்சபுராணச் செம்மல் எனப் போற்றப்படும் இவர், குறைந்தபட்சம் 50,000 நபர்களையாவது பஞ்சபுராண பாராயணம் செய்ய வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு மாபெரும் சிவத்தொண்டை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
கிராமத்தில் ஏழ்மையான சூழலில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய இவர், சிவபெருமானின் திருவருளால் இன்று உலக நாடுகள் போற்றும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.
அமர்நாத், கேதார்நாத், பத்ரிநாத், முக்திநாத், வைஷ்ணோதேவி மற்றும் பல ஜோதிர்லிங்கத் தலங்கள், சக்தி பீடங்கள், தேவார வைப்பு தலங்கள் உள்ளிட்ட பல புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை சென்று தரிசனம் செய்துள்ளார்.
ஆயிரக்கணக்கான நபர்களுக்கு சைவ சித்தாந்தத் தொடர் வகுப்புகளை நடத்தி வருகிறார். மேலும், குறைந்தது 5,000 நபர்களையாவது சைவ சித்தாந்தம் கற்கச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் சைவ சமய நெறிகளைப் பரப்பி வருகிறார்.
குறைந்தது 50,000 நபர்களையாவது பஞ்சபுராண பாராயணம் செய்ய வைக்க வேண்டும் என்ற உயரிய சிவத்தொண்டை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
குறைந்தது 5 இலட்சம் நபர்களிடம் பஞ்சபுராணத்தின் மகத்துவத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்றி வருகிறார்.
சிவச் சின்னங்களாகிய திருநீறு, உருத்திராட்சம், நமசிவாய ஸ்டிக்கர், பஞ்சபுராண நூல் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறார். மேலும், இவற்றை குறைந்தது 1 இலட்சம் நபர்களுக்காவது வழங்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் செயல்பட்டு வருகிறார்.
இணையதளத்தில் “R. Duraisamy” என்று Google-ல் தேடினால், இவரைப் பற்றிய மேலும் பல சிறப்புகளையும் சாதனைகளையும் அறிந்துகொள்ளலாம்.