20,000
சிவனடியார்கள்
12
உலக நாடுகள் [இந்தியா [மையம்], மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள் (அமீரகம்), ஐரோப்பா, அமெரிக்கா இன்னும் பல]
60,000
சான்றிதழ்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை, சுந்தம்பட்டியைத் தலைமை இடமாகக் கொண்டு முனைவர் கயிலை இரா.துரைசாமி அவர்களால் இந்த அறக்கட்டளை 13-09-2023 அன்று நிறுவப்பட்டது.
சைவ சித்தாந்தக் கொள்கைகள், பன்னிரு திருமுறைகள் மற்றும் சைவச் சிந்தனைகளை முற்றிலும் இலவசமாக ஆன்மீகக் கல்விமூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இதுசெயல்படுகின்றது. அறக்கட்டளையின் முக்கியச் செயல்பாடுகள் பல.
அவற்றில் மிக மிக முக்கியமானது சைவ சித்தாந்தச் சுடர் என்றச் சான்றிதழ் படிப்பு. சைவ சித்தாந்த ஞானத்தை 4 மாத கால அளவிற்குள் வாரம் ஒருமுறை இணைய வழி வகுப்புகள் மூலம் எளிதாகக் கற்று உணர்ந்து அதன் வழி வாழ்க்கைப் பயணத்தை அவர்களே மாற்றி அமைத்துக் கொள்ள உதவுவதாகும்.
நாள்தோறும் பன்னிரு திருமுறைகளின் பதிகங்களைப் பண் முறையில் பாராயணம் செய்வது, தெரியாதவர்களுக்குப்பயிற்சிகள் அளிப்பது. அடியவர்களின் ஆர்வத்தைத் தூண்டும்விதமாகப் போட்டிகள், 100 திருமுறைகளைப் பாராயணம் செய்தால் தங்கக் காசு போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகின்றோம்.
பன்னிரு திருமுறைகளின் ஓர் அங்கமாக விளங்கும் பஞ்சபுராணம் பாராயணத்தை பார் எங்கும் கொண்டு சேர்த்தல்.
சைவ சமயப் பாதுகாப்பு : சைவ சித்தாந்தக் கருத்துகளை " சைவ சித்தாந்தச் சுடர் " என்னும் புத்தகத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்த்தல்.
இலக்கியப் பரப்புரை: பன்னிரு திருமுறைகள் மற்றும் தமிழ் அறநூல்களில் உள்ள வாழ்வியல் விழுமியங்களை குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் அனைவர்க்கும் சென்றடையச் செய்தல்.
முறைப்படுத்தப்பட்ட கல்வி: ஆன்மீகக் கல்வியை வெறும் போதனையாக அல்லாமல், சான்றிதழுடன் கூடிய முறையான பாடத்திட்டமாக (Classes & Programs) வழங்குதல்.
பண்பாட்டு விழிப்புணர்வு: இளம் வயதிலேயே குழந்தைகளுக்குப் பஞ்சபுராணம் ஓதுதல் மற்றும் திருமுறை பாராயணம் போன்றவற்றைப் பயிற்றுவித்து, பண்பாட்டு அடையாளத்தை உருவாக்குதல்.
பாரம்பரியம் காத்தல் (Preservation) : பழமை மாறாத தமிழ் இலக்கிய மற்றும் ஆன்மீக மரபுகளைப் போற்றுதல். சைவ சித்தாந்தம், திருமுறைகள், சாத்திரங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தல்.
அறிவுசார் வழிகாட்டுதல் (Educational Guidance) : "சித்தாந்தச் சுடர்" போன்ற வகுப்புகள் மூலம் ஆழமான தத்துவ அறிவை எளிய முறையில் புகட்டுதல்.
சேவை மனப்பான்மை (Service Mindset): சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் ஆன்மீக மற்றும் இலக்கிய அறிவைப் பெறும் வகையில் தொண்டாற்றுதல்.
ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு (Discipline & Dedication): கற்பித்தல் மற்றும் கற்றலில் முறையான நெறிமுறைகளைப் பின்பற்றுதல்.